Monday, October 1, 2012

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையே உலுக்கிவிட்டிக்கின்றது. உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.
http://www.marhum-muslim.com/இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும். முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்றால் யார்?
என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா?
இத்துணை நூற்றாண்டுகள் உண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இக்கின்றார்கள்?
இத்துணை ஆண்டுகளுக்கு பிறகுமா மக்கள் அவருக்குத் தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்?
யார்தான் அவர்? எப்படிபட்டவர் அவர்?
அவர் செய்த சாதனைகள் என்ன?
அவர் சந்தித்த சோதனைகள் என்ன? போன்ற கேள்விகள் இன்று உலகெங்கும் மக்கள் மத்தியில் உரத்துக் கேட்கபடுகின்றன.
உங்களுக்குள்ளும் இந்தக் கேள்விகள் எழுந்திக்கலாம். அந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த மடக்கோலை.
யார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)? இறைவனிடமிருந்து இத்தரணியில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகின்ற உலக மக்கள் அனைவக்ளப்பட்ட இறைத்தூதர்தாம் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மனித குல மாணிக்கமாக, அகிலங்களுக்கெல்லாம் அட்கொடையாக வாழ்ந்து சென்றவர்தாம் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
"பணம், குலம், அழகு ஆகியவற்றைப் பார்த்து மணம் முடிக்காதீர்கள்.மார்க்கத்தை பார்த்தே பெண்ணை மணம் முடித்துக் கொள்ளுங்கள்' எனச்சொல்லி அமைதியான மணவாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்.
"அரபி அல்லாதவரை விட அரபியோ, அரபியை விட அரபி அல்லாதவரோ சிறந்தவர் அன்று. உங்களில் எவர் இறையச்சம் மிக்கவரோ அவரே உங்களில்சிறந்தவர்'' என்றும்,
"பிறரைக் கீழே வீழ்த்திவிடுபவன் பலசாலி அல்ல. கோபம்வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே பலசாலி'' என்றும், சொன்னவர் தான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறைவனின் பெயரால்...
"உழைபாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கு அவரது கூலியைக் கொடுக்க வேண்டும்'' என்றும் கூறி, தூமையான பொருளாதார நடைமுறைகளுக்கு வித்திட்டவர்.
"சமூகத்தின் தலைவன் சமூகத்தினரின் தொண்டனாவான்' என்றும் "பதவியை விரும்புகின்றவர்களுக்கு பொறுப்புகளைத் தராதீர்' என்றும் தீர்க்கமான கட்டளைகளைத் தந்து உன்னதமான அரசியல் வாழ்வுக்கு வழிகாட்டியவர்.
உயர்குலப் பெண் திட்டுக் குற்றத்துக்கு ஆளாகி தண்டனையும் விதிக்கபட்ட நிலையில் அவளுக்காக தோழர்கள் பரிந்து பேசியபோது "ஆளுக்கொ நீதி கடைபிடித்த சமூகங்கள் அழிந்து போனது உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகள் ஃபாத்திமாவே தவறிழைத்தாலும் அவளையும் தண்டிபேன்'' எனச் சூளுரைத்து நீதிக்கு உறுதியளித்தவர். இப்படி அண்ணல் நபிகளாரின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரைக் குறித்து இறைவனே ஒரே வரியில் அறிமுகபடுத்தி இருக்கிறான். ''மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இக்கின்றீர்''. (திக்குர்ஆன் 68 : 4)
உண்மை. முற்றிலும் உண்மை. அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய குணங்களைக் கொண்டவராகத்தான் இந்தார். இதற்கு அவடவாழ்ந்த அவரின் மனைவியரும், தோழர்களுமே சான்றளித்திக்கின்றார்கள்.
அவற்றின் விவரம் வருமாறு:
அண்ணல் நபிகளாடபத்தைந்து ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தியவர் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா. முதன்முதலாக இறைவனிடமிருந்து வசனங்கள் அளப்பட்ட போது பயந்து வியர்த்து விதிர்த்து வந்த அண்ணல் நபிகளாரைப் பார்த்து அன்னையார் ரளியல்லாஹு அன்ஹா சொன்ன வாசகங்களைப் பாருங்கள்:
"இறைவன் மீது ஆணையாக! இறைவன் உங்களை எந்தக்காலத்திலும் வேதனையில் ஆழ்த்த மாட்டான்.
நீங்கள் உறவுகளை மதித்தும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் வாழ்கின்றீர்கள்.
கடனாளிகளின் கடன் சுமையைப் போக்குகின்றீர்கள்.
ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உதவுகின்றீர்கள்.
விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்.
உண்மைக்கும் சத்தியத்திற்கும் தோள் கொடுக்கின்றீர்கள்.
துன்பத்தில் உழல்கின்ற மக்களின் துயர் துடைக்கின்றீர்கள்.''
அண்ணல் நபிகளாரின் இன்னொருமனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. அண்ணல் நபிகளாரின் மரணம் வரை அவடந்தவர். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
""அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்எவரையும் எந்தக் காலத்திலும் திட்டியதில்லை.
தனக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்கும் நன்மையையே செய்து வந்திருக்கின்றார்.
சொந்த விவகாரங்களில் எவரையும் பழிக்கு பழி வாங்கியதில்லை.
எந்தவொரு மனிதரையும் அவர் சபித்ததில்லை. எந்தவொரு பணியாளரையும் பணிபெண்ணையும் கை நீட்டி அடித்ததில்லை.''
அண்ணல் நபிகளாடபாடுபட்ட உற்ற தோழர்தாம் அலீ பின் அபூதாலி (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பயணத்திலும் போரிலும் வணக்க வழிபாட்டிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் இணைபிரியா நண்பராக வாழ்ந்தவர்தாம் அலீ பின் அபூதாலி;
"அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மென்மையானவர்.
இளகிய மனம்கொண்டவர்கள். எந்தக்காலத்திலும் கடுமையாக நடந்து கொண்டதில்லை.
மிகவும் பரந்த மனம் கொண்டவர். ஓங்கி பேசமாட்டார்.
எந்தக் காலத்திலும் அவருடைய நாவிலிருந்து கெட்ட வார்த்தைகள் வந்ததில்லை.
எவருடைய குறையையும் துருவித் துருவி ஆராய்ந்ததில்லை.
வீண்விவாதம், அதிக பேச்சு, பயனற்ற பொழுதுபோக்கு ஆகிய மூன்றிலிருந்தும் அறவே விலகியிருந்தார்.''
''அண்ணல் நபிகளாரின் தோழர்களில் ஒவர் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு. அண்ணல் நபிகளாரின் பணியாளராய் பல்லாண்டுகள் இந்தவர். அவர் கூறுகின்றார்:
"நான் அண்ணல் நபிகளாரின் பணியாளராக பத்து ஆண்டுகள் சேவையாற்றியிக் நாள் கூட என்னைப் பார்த்து "சே..' என்று கூட சொன்னதில்லை. அவர் சொன்ன வேலையைச் செய்ய மறந்துவிட்டாலும், அல்லது செய்யத் தவறிவிட்டாலும் கூட அவர் என்னைப்பார்த்து "ஏன் இப்படி நடந்து கொண்டா? வார்த்தைகேட்டது கிடையாது.'
அண்ணல் நபிகளாரின் அழைப்பை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற அபூசுயான் ரோமப் பேரரசரிடம் அண்ணல் நபிகளாரைக் குறித்துச்சொன்னதாவது:
"முஹம்மத் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் எந்தக்காலத்திலும் கொடுத்த வாக்குறுதியை மீறியதில்லை. ஒபந்தத்தை உடைத்ததில்லை.'' இந்தச் சான்றுகள் தருகின்ற செய்தி என்ன?
இன்னொன்றையும் கேளுங்கள். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதிலும் ஒருவரைக் கூட கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது.
கைதிகளாக பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. அண்ணல் நபிகளாரை வளர்த்து பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலி, இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்தார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் பலர் இஸ்லாமியப்பிரச்சாரம் தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைக்கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க அண்ணலாரிடம் அனுமதிகோரிய போது அதனை மறுத்தார். அதுமட்டுமல்ல, மக்கா நகரம் அண்ணலாரால் வெற்றி கொள்ளபட்டபோது, தமக்கும் தம் குடும்பத்தினர் மக்காவாசிகளை மனப்பூர்வமாக மன்னித்த மாண்பாளர் அவர்.
பகைவரையும் மன்னித்த அந்த பண்பாளரைப் பற்றி, மென்மைக்கு அடையாளமாய் வாழ்ந்த அந்த உத்தமரைப் பற்றி, இளகிய மனமும் ஒழுக்கசீலமும் படைத்த அந்த மாமனிதரைப்பற்றி, கனிவும் கணையும்கொண்ட, வாழ்நாளில் எவரையும் பழி வாங்காத அந்த உயர்ந்த தலைவரைப்பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமே என உங்கள் மனம் பரபரக்கின்றதா?
தொடர்பு கொள்ளுங்கள்:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு புதுச்சேரி
138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 600 012
Tel : 044 -2662 1101, Fax : 2662 0682


Website :
www.jihtn.org

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::