Thursday, March 29, 2012

திருச்சியில் அமைச்சரின் தம்பி படுகொலை....

திருச்சியில் அமைச்சரின் தம்பி படுகொலை....

 

 
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (50) இன்று (29.03.2012) காலை வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றவர், திரும்பி வரவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
http://www.marhum-muslim.com/ராமஜெயம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று திமுகவினர் சந்தேகம் அடைந்ததால், கே.என்.நேரு மற்றும் ராமஜெயத்தின் வீடுகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சி கல்லணை ரோட்டில் 8வது கிலோ மீட்டரில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கு, இரண்டு கைகளையும், கால்களையும் கம்பியால் கட்டி, செல்லோ டேப்பால் ஒட்டி போர்வையால் ராமஜெயத்தின் உடல் மூடியிருந்தது. போலீசார் உடலை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::