இன்னமும் இருக்கிறார்கள் காட்டுமிராண்டிகள்!
தன் சொல் கேளாத மகளைச் சுட்டுக்கொன்று
குழி தோண்டிப் புதைத்த தந்தையின் பாதகச் செயல், வளைகுடாவில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதாகும் சாரா அரசியல் அறிவியல்
மாணவியாவார். சென்ற பிப்ரவரியில், தனது சொல்லைக் கேட்காததால் சாராவின்
அமீராத்தி தந்தை அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, துடிக்கத் துடிக்க
உயிர் பிரிந்து கொண்டிருக்கும் போதே புதைகுழியைத் தோண்டி, சாரா இறந்த பின்
அக்குழியிலேயே போட்டுப் புதைத்துள்ளதாக சலமா தெரிவித்துள்ளார்.
சாராவைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்ட அவரது தந்தை, சாரா தன் சொல் கேட்டு அடிபணியாமை தான் கொலைக்குக் காரணம் என்று கூறி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அறிவியலும் கல்வியும் வளர்ந்துள்ள இக்காலத்திலும் இது போன்ற காட்டுமிராண்டிகள் மனித குலத்துக்கே கேவல அடையாளச் சின்னமாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
சாராவைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்ட அவரது தந்தை, சாரா தன் சொல் கேட்டு அடிபணியாமை தான் கொலைக்குக் காரணம் என்று கூறி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அறிவியலும் கல்வியும் வளர்ந்துள்ள இக்காலத்திலும் இது போன்ற காட்டுமிராண்டிகள் மனித குலத்துக்கே கேவல அடையாளச் சின்னமாக இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment