Saturday, August 30, 2014

சுயரூபம்...!

வெளிச்சத்துக்கு வரும் மருத்துவர்களின் சுயரூபம்
கடந்த 17-08-2014 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சியின் விவாத பொருள் - மருத்துவர்கள் கமிசன் தொகையை எதிர்பார்த்து தேவையில்லாத டெஸ்டுகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர் என்பது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கோபிநாத் தவறான அறிவியல்பூர்வமற்ற கருத்துக்களை கூறி மக்களை திசைதிருப்புகிறார் என்று மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட IMA மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொது மக்களின் மீது கொண்ட அளவு கடந்த அக்கறை கோபமாக உருமாறி அவர்களை போராட்ட களத்தில் இறக்கி விட்டிருக்கிறது. முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்புவது, தனியாக வெப்சைட் ஆரம்பித்து கருத்துக்களை பதிவு செய்வது, முகநூலில் கருத்துரைகளை பரப்புவது என்பதோடு நில்லாமல் தெருவில் இறங்கி போராடவும் ஆரம்பித்துள்ளது வீறு கொண்ட மருத்துவர் கூட்டம்.
இருந்தாலும் MBBS படித்து முடித்தவுடன் மருத்துவர்கள் தமிழை மறந்து விட்டதால் சொல்லி வைத்தது போல் அவர்களின் பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. மக்களுக்கு புரியாது என்று தெரிந்திருந்தாலும் புரியாத மொழியில் prescription எழுதுவது முதல், நோயை மக்களுக்கு புரியாத மொழியிலேயே பேசி பழக்கப்பட்டதால் அவர்கள் இப்படி செய்து இருக்கலாம். இருந்தாலும் எந்த மக்களுக்காக போராடுகின்றனரோ அவர்களிடம் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து கூற கீழ்கண்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
1. மக்களை தவறான முறையில் அறிவியல்பூர்வமற்ற செய்திகளை கூறி திசை திருப்புகிறார் என்று கோபிநாத் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள்.அவர் வாங்கிய காசுக்கு பேசுகிறார் என்றும் கூறுகிறீர்கள். உண்மை தான். ஆனால் காம்ப்ளான் விளம்பரம் முதல் கக்கூஸ் கழுவும் திரவம் வரை அனைத்து விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழிநடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?

2. மக்கள் சுய மருத்துவம் மேற்கொள்ள கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கூறுகிறீர்கள். சின்ன தலைவலி, காய்ச்சல் என்றாலும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வாருங்கள், அது hematoma,carcinoma,malaria என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால் தினசரி தலைவலிக்கு crocin, காய்ச்சலுக்கு vicks action 500, மூட்டுவலிக்கு volini spray, உடல் சோர்வு, உடல் வலிக்கு neurobion என்று பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள், மக்களை சுயமருத்துவம் மேற்கொள்ள சொல்லி தூண்டுகிறதே! அவர்களை எதிர்த்து நீங்கள் வீறு கொண்டு எழாதது ஏன்?
3. இந்திய மருந்து சந்தையில், மருந்துகள் நுழைய பல கட்ட ஆய்வுமுடிவுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் cipla போன்ற சில மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுடன் கூட்டு சேர்ந்து முறைகேடான செயல்களில் ஈடுபட்டு தவறான ஆய்வறிக்கையை தயாரித்து சந்தையில் நுழைந்துள்ளன. இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு,ஊடகங்களிலும் அந்த செய்தி வந்திருந்த்து. இது மக்களை ஏமாற்றும் செயல் மட்டும் அல்ல, அந்த மருந்துகளை பரிந்துரை செய்யும் மருத்துவர்களையும் ஏமாற்றும் செயல்.http://www.frontline.in/static/html/fl2913/stories/20120713291300800.htm 
இப்போது கோபிநாத் என்ற தனி மனிதனுக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்த மருத்துவரும் அப்போது பன்னாட்டு நிறுவன்ங்களுக்கு எதிராக போராடவில்லையே ஏன்?
4. நீயா நானா நிகழ்ச்சியின் விவாத பொருளான, பரிசோதனை நிலையங்களிடமிருந்து கமிசன் பெறுவது என்பது மருத்துவர்களின் தொழில் தர்மம்-professional ethics தொடர்பானது. இந்த professional ethics ஐ கண்காணிக்க கூடிய இந்தியாவின் உயர் அதிகார அமைப்பான Medical council of India வின் உறுப்பினராக உள்ளவர், கேதன் தேசாய். இவர் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டவர். இவரிடமிருந்து கிலோ கணக்கில் தங்கமும், லாரி லாரியாக பணமும் கைப்பற்றப்பட்டது. ஆனால் இவரை MCI உறுப்பினராக குஜராத் மாநில மருத்துவ கவுன்சில் எதிர்ப்புகள் இல்லாமல் தேர்வு செய்துள்ளது. கேதன் தேசாயை தங்களது professional ethics ஐ கண்காணிக்கும் அமைப்பின் உறுப்பினராக அனுமதித்துள்ள மருத்துவர்கள், professional ethics குறித்து கேள்வி எழுப்பிய கோபிநாத் “எங்களின் கால் தூசுக்கு ஈடில்லை” என்று முகநூலில் பதிவிட என்ன தகுதி உள்ளது?
5. நீயா நானா நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவர் அமைப்புகளில், IMA என்று அழைக்கப்படும் INDAIN MEDICAL ASSOCIATION னும் ஒன்று. இவர்கள், தங்களின் மேல்மட்ட அமைப்பான WORLD MEDICAL ASSOCIATION க்கு இந்திய பிரதிநிதியாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேதன் தேசாயை அனுப்பி வைத்துள்ளனர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று இவர்கள் கூறுவது ஊரை ஏமாற்றும் வேலை இல்லையா..?
இவை மட்டும் அல்ல :
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 
அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா?
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள் 
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள். 
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது 
E 422 – ஆல்கஹால் 
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால் 
E 476 – ஆல்கஹால் 
E 481 – எருது & கோழி 
E 627 – ஆபத்தான கெமிக்கல் 
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி 
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note  – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், (maggie ) flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
(பி.கு இந்த குறியீடை குறித்து கொள்ளுங்கள்)
தகவல்களை பதிவிட்ட நண்பர்கள் : மக்கள் நல மருத்துவ கூட்டமைப்பு, Muthuramalingam Subramanian, மற்றும் என்னுடன் ஷேர் செய்த நண்பர்கள் : Anandhan Palanisamy,  Acu Healer Mohanraj,  Acu Healer Balamurugan ஆகியோருக்கு என்னுடைய நன்றிகள்.
மேல்க்கண்ட பெரும்பாலான விளம்பரத்திற்கும் யாராவது ஒருத்தர் டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து விளம்பரம் கொடுக்கிறார். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் தானா? அந்த மருத்துவர்கள் கூறுபவை அனைத்தும் உண்மையா? அவர்கள் எல்லாம் காசுக்காக மக்களை தவறாக வழிநடத்தவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுவரை ஒரு துண்டறிக்கை கூட வந்ததில்லையே, ஏன்?
டாக்டர் கோட் மாட்டி கொண்டு வந்து நடத்தும் இந்த வியாபாரங்கள், விளம்பரங்கள் ஆரோக்யதை கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா...? மக்கள் நலனை விடவா இவர்கள் கொடுக்கும் காசு உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக தெரிகிறது...!
சர்க்கரை நோய்க்கு சாப்பிடும் மருந்துகள் சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அரசே தடை செய்த போது, அந்த மருந்துகளுக்கு தடை நீக்கம் செய்ய போராடிய நீங்களா இதனை கண்டுகொள்ள போகிறீர்கள்...
மக்களே உங்கள் நலன் உங்கள் கையில்... நீங்கள் தெளிவாக இருந்தால் இந்த எந்த வியாபாரிகளாலும் உங்களை ஏமாற்ற முடியாது... இனி உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்...!
மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?
மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த மருத்துவ ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை நம்பியே நம் சிகிச்சைகள் அனைத்தும் அமைந்துள்ளன. இப்படி அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்பினால் அச்சம் வருவது இயல்புதான்.
நம் உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதில் துவங்கி, என்னென்ன நோய்கள் நம் உடலில் குடியிருந்து கொண்டிருக்கின்றன, எந்தெந்த உறுப்புகளை அறுவை சிகிச்சையில் நீக்கலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் நம்புவது இந்த மருத்துவ ஆய்வுகளைத்தான். கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு. ஆனால் டெஸ்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு நம் நம்பிக்கை பெற்ற ஒன்றாக இந்த நூற்றாண்டில் ஆய்வுக்கூடங்கள் விளங்குகின்றன.
நாம் ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு முன்னால் மருத்துவத் துறையின் அறிவுசார் நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு கண்டுபிடிப்பு நிரூபிக்கப்பட்ட பின்னால் பல வருடங்கள் கழித்து அது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அடிப்படை அறிவியலின் வழியில் தவறான ஆய்வுகள் திருத்திக் கொள்ளப்படும். இது அறிவியல் துறைகளுக்கான பொது விதியாகும். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் .. மருத்துவத்துறையில் இன்று இது நிகழ்கிறதா? போன நூற்றாண்டு வரை மாற்றங்களுக்கு உட்பட்ட மருத்துவ அறிவியல் இன்று எதிர்க்குரலற்று ஒற்றைப் பாதையில் கேள்விகளில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் பாஸ்டியர் ரத்த வெள்ளை அணுக்கள் உயிரற்றவை என்று கண்டுபிடித்தார். இன்று நாம் அதை நம்புகிறோமா? மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டிஸ் மனித மூளை சளியால் ஆனது என்று அறிவித்தார். இன்றும் அப்படியேதான் நாம் கூறிக் கொண்டிருக்கிறோமா? வெள்ளை அணுக்கள் உயிருள்ளவை என்பது மட்டுமல்ல அவை எதிப்பு சக்தியின் அடிப்படை என்பதையும், மூளை நரம்பு மண்டலத்தின் தொகுப்பு என்பதையும் நவீன மருத்துவ அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துவிட்டார்களல்லவா? அப்படி எதிர் கேள்விகளில் இருந்துதான் மருத்துவ அறிவியல் தன்னை தகவமைத்து வந்திருக்கிறது என்பது வரலாறு. ஆனால் இன்றைய மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாற்றான குரல்களை அறிவியலுக்கு எதிராகப் புரிந்து கொள்வதால் அப்படியான குரல்கள் அங்கீகாரம் பெறவில்லை. மாற்று ஆய்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
சரி. மறுபடியும் நாம் துவங்கிய இடத்திற்கே வருவோம். மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா? இதற்கு நேரடியாக பதில் கூறுவதாக இருந்தால் - மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லாது. ஆனால் அவை கூறுவது சிகிச்சைக்குப் பயன்படாது. உடலின் முழுமைத் தன்மையை ஆய்வு முடிவுகளால் தரவே முடியாது.
நாம் இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்வோம். கழிவுகளில் செய்யப்படும் டெஸ்டுகள். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் டெஸ்ட்டுகளைப் பார்ப்போம்.
நம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன? இந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும், மலக்குடலின் வழியாக மலமும், நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப் பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.
உதாரணமாக நம் ரத்தத்தில் பத்து புழுக்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். (பயப்பட வேண்டாம் அப்படியெல்லாம் இருக்காது. சும்மா புரிவதற்காக). ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற வேண்டிய வேலை சிறுநீரகத்திற்கும், கல்லீரலுக்கும் இருக்கிறது. நம் ரத்தத்தில் இருக்கும் இந்தப் புழுக்களை வெளியேற்றுவதுதானே உடலிற்கு நல்லது? நம் கழிவு நீக்க உறுப்புக்கள் இந்தப் புழுக்களை அடையாளம் கண்டு கழிவுகளாக வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரின் வழியாக இரண்டு புழுக்கள் வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு உடலில் இருந்து புழுக்கள் வெளியேற்றப்படுவது நன்மையானது என்பதில் எதுவும் சந்தேகம் இல்லையே? அல்லது புழுக்களை உள்ளேயே வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறதா? கழிவு நீக்க உறுப்புக்களால் கழிவுகள் அடையாளம் காணப்பட்டு அவைகள் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றவை அனைத்தும் கழிவுகளே.
இப்போது இரண்டு புழுக்கள் சிறுநீரின் வழியாக வெளியேறுகிறது. ஒரு ஆய்வுக்கூட நிபுணர் இதைப் பார்த்து விட்டு கூறுகிறார் – உங்கள் சிறுநீரில் இரண்டு புழுக்கள் இருக்கின்றன. எனவே உங்கள் ரத்தத்தில் இரண்டு புழுக்கள் இருக்கும்” என்று. இது சரியாக இருக்கிறதா? இல்லை. ஏனென்றால் ரத்தத்தில் எவ்வளவு புழுக்கள் இருக்கும் என்பதை சிறுநீரில் வெளிவந்த புழுக்களை வைத்துச் சொல்ல முடியுமா? இப்படித்தான் நம்முடைய ஆய்வுக்கூடங்கள் நம் சிறுநீரைப் பரிசோதித்து கருத்துச் சொல்கின்றன. உங்கள் சிறுநீரில் இரண்டு ப்ளஸ் சர்க்கரை இருக்கிறது. அதனால் அதே அளவு சர்க்கரை உங்கள் ரத்தத்தில் இருக்கும் என்று. இவ்வாறு மலம், சிறுநீர், சளி என்று கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் இவ்விதமாகவே முடிவுகளை வெளியிடுகின்றன.
ஒருவருக்கு ரத்தத்தில் உப்பு மூன்று ப்ளஸ்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவருடைய சிறுநீரகங்களின் வேலை என்ன? ரத்தத்தில் கழிவாக உள்ள அளவுக்கு அதிகமான உப்பை பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது. அப்படி வெளியேற்றப்படும் சிறுநீரில் மூன்று ப்ளஸ் உப்பு இருந்தால் அவர் ரத்தத்தில் எவ்வளவு இருக்கும்? ஆய்வுக்கூடங்கள் கூறுகின்றன மூன்று ப்ளஸ் அப்படியே இருக்கும் என்று. உள்ளிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் போது உடலில் கழிவுகள் குறையும் என்பது தானே உடலியல். அதற்கு மாறாக வெளியேற்றப்பட்ட கழிவுகளைக் கொண்டு உடலில் இருக்கும் கழிவுகளை அளவிட முடியுமா?
சரி. அப்படியானால் இந்தக் கழிவுகளை டெஸ்ட் செய்து முடிவுகளை எப்படி சொல்லலாம்? ஒருவருக்கு சிறுநீரில் மஞ்சள் காமாலை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்படி என்றால் சிறுநீரில் பித்தம் வெளியேற்றப்பட்டு இருக்கிறது என்று பொருள். எங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது? ரத்தத்தில் அளவிற்கு அதிகமாக கலந்து விட்ட பித்தத்தை சிறுநீரகம் அடையாளம் கண்டு வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரில் பித்தம் வெளியாகிற போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. நம் சிறுநீரகம் மிகச்சரியாக இருக்கிறது. அது சரியாக இருப்பதால் தான் கழிவுகளை உள்ளிருந்து பிரித்து அனுப்புகிறது.
2. ரத்தத்தில் இருக்கும் பித்தம் சிறுநீர் வழியாக வெளியேறத்துவங்கி விட்டது. அதாவது உடல் தன் கழிவு நீக்க வேலையைத் துவங்கி விட்டது. அது விரைவில் முழுமையாக வெளியேற்றிவிடும்.
3. அப்படி சிறுநீரின் மூலம் வெளியேறினால் தான் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
4. எந்த அளவு சிறுநீரில் உள்ள பித்தம் அதிகமாகிறதோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் ரத்தத்தில் உள்ள பித்தம்தான் நீரின் வழியாக வெளியேறுகிறது. அது விரைவில் வெளியேறினால் ரத்தம் சுத்திகரிப்படையும்.
5. இவ்வாறு நம் கழிவு நீக்க உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றத் துவங்கி விட்டால் நாம் குணமாகி வருகிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு எதிர்ப்பு சக்தியைப்பெற்று இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.
மேற்கண்ட உதாரணம் மஞ்சள் காமாலை டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல. கழிவுகளில் செய்யப்படும் அனைத்து டெஸ்ட்டுகளுக்கும் பொருந்தும். உலகில் இதுவரை எந்த ஆய்வுக்கூடமாவது ஆய்வு முடிவுகளைப் பார்த்து உங்கள் உடல் நன்மை செய்துகொண்டு இருக்கிறது என்றோ, அல்லது எவ்வளவு கழிவு வெளியேறுகிறதோ அவ்வளவு நல்லது என்றோ சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? அப்படி சொன்னால் நமக்கு சிகிச்சை தேவையில்லை. உடலிற்கு துணை நிற்கும் எளிய உணவுகளே போதும் என்று நாம் தெரிந்து கொண்டுவிட்டால் எப்படி வியாபாரம் செய்வது? உலகின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக மருத்துவம் மாற முடியாதே?
நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் செய்யப்படும் எல்லா டெஸ்ட்டுகளும் நம்மை பயமுறுத்தவே உதவி செய்யும். மாறாக உடல்நலனை திரும்பப் பெற உதவாது. கடைசியாக ஒரு தகவல்.
நாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் எந்த பொருளாவது, எந்த சேவையாவது குறைபாடாக இருந்தால் வழக்கு தொடுக்க முடியும். இது அடிப்படை மனித உரிமை. ஆனால் உலகில் எங்காவது ஒரு மருத்துவ ஆய்வுக்கூடத்தின் மேல் வழக்குத் தொடரப்பட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி வழக்குத் தொடர முடியாது. ஏனென்றால் உயிரோடு உள்ள ஒவ்வொரு மனித உடலும் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கும். காலையில் நீங்கள் செய்த டெஸ்ட்டுகள் மாலையில் மாறிவிடலாம். அதுதான் உடலின் இயல்பு என்பது எல்லா மருத்துவ அறிஞர்களுக்கும், மருத்துவ சட்டங்களுக்கும் தெரியும். உங்களையும், என்னையும் போன்ற சராசரி மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியாது.
விஞ்ஞானிகள் தங்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்தும் எலிகளிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தானே..?
முழு தொகுப்பு : http://www.rkacu.blogspot.in/2012/04/blog-post_9480.html
இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.
( தற்போது அக்குபங்சர் மருத்துவராக இருக்கும் ஹீலர்.அ.உமர் பாரூக் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலில் பட்டயம் பெற்றவர். சார்பு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ரத்தவியல் துறையில் பணியாற்றியவர். )

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::